Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வரும் ஜூலை 12இல் மவுன சத்தியாகிரகம் .. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வரும் ஜூலை 12இல் மவுன சத்தியாகிரகம் .. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

By: vaithegi Mon, 10 July 2023 10:44:24 AM

நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வரும் ஜூலை 12இல் மவுன சத்தியாகிரகம் .. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

இந்தியா: நாடு முழுவதும் மவுன சத்தியாகிரகம் .... காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கர்நாடகாவில் மோடி பெயர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குஜராத் சூரத் நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர் தனது எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தும் அந்த மனவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

satyagraha,congress party ,சத்தியாகிரகம் ,காங்கிரஸ் கட்சி

எனவே இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுவுள்ளனர். அதில், மக்களவையிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகையில்

வருகிற ஜூலை 12-ம் தேதி புதன்கிழமை அன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் மௌன சத்யாகிரகத்தை நடத்த உள்ளனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :