Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனாவை எதிர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும் - காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம்

சிவசேனாவை எதிர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும் - காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம்

By: Karunakaran Fri, 17 July 2020 12:00:16 PM

சிவசேனாவை எதிர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும் - காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம்

சமீபத்தில் கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர்கள் செய்த நில மோசடி குறித்து விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், சஞ்சய் நிருபம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மும்பை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கட்சி தலைமைக்கு வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சஞ்சய் நிருபம் தனது டுவிட்டர் பக்கத்தில், சிவசேனா கட்சியின் தலைவர்கள் நிலமோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என நான் விரும்பினேன் என்று பதிவிட்டுள்ளார்.

sanjay nirupam,congress party,shiv sena,congress leader ,காங்கிரஸ் கட்சி சஞ்சய் நிருபம், காங்கிரஸ் தலைவர் சிவசேனா

என் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மும்பை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர். சிவசேனாவுக்கு எதிராக நான் பேசினால் அது கட்சிக்கு எதிரான நடவடிக்கையா? அப்படியானால் மும்பை காங்கிரசும், சிவசேனாவும் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டதா? என்று சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சிவசேனாவை காதலிக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், சிவசேனாவுக்கு முன் மண்டியிடுவதற்கு பதிலாக, அந்த கட்சியை எதிர்த்துப் போராடுங்கள், இல்லையெனில் காங்கிரஸ் அழிந்துவிடும் என்று சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.

Tags :