காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி; தொண்டர்கள் பரபரப்பு
By: Nagaraj Thu, 30 July 2020 10:34:00 PM
காங். தலைவர் சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தொண்டர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி இன்று இரவு சுமார் 7 மணியளவில், டெல்லியில் சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைகள் செய்து கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் டி.எஸ். ராணா கூறியதாவது:
கங்கா
ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று இரவு 7
மணிக்கு சேர்க்கப்பட்டார். இது வழக்கமான சோதனைதான். அதற்காக தான் அவர்
இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். சோனியா காந்தி நலமுடன் உள்ளார் என்று
கூறினார்.
முன்னதாக, காங். மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டத்தில்
சோனியா இன்று பங்கேற்றார். அந்த கூட்டம் 3 மணி நேரத்துக்கும் மேலாக
நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல்,
கொரோனா விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரது கருத்துகளை கேட்டறிந்தார்.