Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயில் காலத்தை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

வெயில் காலத்தை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

By: Nagaraj Tue, 07 Mar 2023 09:57:03 AM

வெயில் காலத்தை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

புதுடில்லி: வெயில் காலத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குளிர்காலம் ஓய்ந்தநிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மே மாதத்தைப் போன்ற வெயில் கொடுமையை பார்க்க முடிகிறது. இந்த ஆண்டு கோடை காலம் மிக மோசமான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெயில் காலத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அடுத்த சில மாதங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பருவமழை மற்றும் முக்கிய பயிர்களின் சாகுபடி அளவு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். போதுமான உணவு தானியங்களை இருப்பு வைக்க இந்திய உணவு கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர். அவசரநிலையை சமாளிக்க மாநிலங்கள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்புகளின் தயார்நிலை குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

advice,developments,modi,prime minister,summer, ,ஆலோசனை, பிரதமர், முன்னேற்பாடுகள், மோடி, வெயில் காலம்

அதிக வெப்பத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவற்றைக் கேட்டு பிரதமர் மோடி பேசியதாவது:- இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தினசரி வானிலை அறிக்கைகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தயாரிக்க வேண்டும். தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் வானொலி நிலையங்கள் அவற்றை படிக்க ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள்.

ஆஸ்பத்திரிகளில் தீதடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். தீயணைப்பு வீரர்களை கொண்டு தீதடுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் வினியோகம், கால்நடை தீவனம், குடிநீர் வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

வெயில் பாதிப்புகள் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அதிகபட்ச வெப்பநிலை நிலவும்போது, என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை துண்டு பிரசுரங்கள், சினிமாக்கள் உள்ளிட்டவை மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். காட்டுத்தீ பரவுவதை தடுக்கவும், அணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|
|