- வீடு›
- செய்திகள்›
- சென்னை தலைமை செயலகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
By: vaithegi Thu, 23 June 2022 2:49:10 PM
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே ஏற்பட்ட லேசான காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். இதனையடுத்து அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழா சென்னை திருவான்மியூரில் இன்று காலை நடந்தது. திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
விழாவை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறகு சென்னை தலைமை செயலகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Tags :