ஜி 20 மாநாடு குறித்து டில்லியில் ஆலோசனை... மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்
By: Nagaraj Mon, 05 Dec 2022 5:18:08 PM
புதுடெல்லி: ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை
நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள ஜனாதிபதி
மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பு கூட்டம் நடக்கிறது.
ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தலைமைத்துவம்
சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடப்பு ஆண்டில்
இந்தியாவுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. இந்தாண்டு ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
இதற்காக ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த இந்தியா தயாராகி
வருகிறது. ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய
தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட ஜி20
நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜி20
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்
இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதில் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர்
பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக சட்டப்பேரவை
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி
பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.