சிறப்பு பேருந்துகள் ... அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை
By: vaithegi Tue, 03 Jan 2023 10:09:15 AM
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்து செல்வர். எனவே பொது மக்களின் பயணத்தை சுலபமாக்கும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் அதிகளவில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் என்பதால் 12ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்து கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதனை அடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.மேலும் அத்துடன் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.