ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிப்பு
By: vaithegi Sat, 10 Sept 2022 11:05:36 AM
மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் ஏற்கனவே காவிரியில் வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வருகிறது.
இதன் இடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து கொண்டு வருகிறது.
இதையடுத்து ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 65 அயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.