தொடர்ந்து பெய்யும் கனமழை... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
By: Nagaraj Thu, 01 Sept 2022 2:57:16 PM
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்றும், இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவுமுதல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,
மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி,
கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே,
இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்
என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.