Advertisement

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sat, 30 July 2022 11:22:13 AM

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை

மங்களூரு : தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே மழை பெய்கிறது. கோடை காலமான ஜூன், ஜூலை மாதத்தில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தட்சிண கன்னடா துணை ஆணையர் (டிசி) டாக்டர் கேவி ராஜேந்திரா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

holiday,karnataka ,விடுமுறை,கர்நாடகா

இதை அடுத்து அதில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மங்களூரு சப்-டிவிஷன் (மங்களூரு சிட்டி கார்ப்பரேஷன், முல்கி, மூடபித்ரி,உல்லல் மற்றும் பண்ட்வால் தாலுகா) முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை என்று தட்சிண கன்னடா துணை ஆணையர் கே.வி.ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும் மழை வெள்ளத்தால் சாலைகள் பலவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மங்களூரு மாநகராட்சி எல்லையில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புத்தூரில் மழை நிலவரம் குறித்து தாசில்தார் மற்றும் பிஇஓக்கள் உரிய முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :