Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் மழை .. கறிக்கோழி நுகர்வு குறைவு ...பல்லடத்தில் அதன் விலையும் கடும் வீழ்ச்சி

தொடர் மழை .. கறிக்கோழி நுகர்வு குறைவு ...பல்லடத்தில் அதன் விலையும் கடும் வீழ்ச்சி

By: vaithegi Fri, 22 July 2022 10:32:36 AM

தொடர் மழை .. கறிக்கோழி நுகர்வு குறைவு ...பல்லடத்தில்  அதன் விலையும் கடும் வீழ்ச்சி

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதை அடுத்து கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து கொண்டு அறிவிக்கின்றனர். இந்நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

chicken,continuous rain,price,fall ,கறிக்கோழி ,தொடர் மழை ,விலை,வீழ்ச்சி

மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9ந்தேதி கறிக்கோழி 1 கிலோ கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்தநிலையில் இன்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலைமை சரியாகும் வரை கறிக்கோழி உற்பத்தியை 25 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Tags :
|