தேனியில் தொடர் கன மழை .. வைகை அணைக்கு நீர்வரத்து உயர்வு
By: vaithegi Wed, 31 Aug 2022 3:11:29 PM
தேனி: ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது.
எனவே இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்தநிலையில், வைகை அணை அதன் முழு கொள்ளளவை (70 அடி) எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 4006 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதனால் ஆற்றின் கரையோரமாக உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், போன்ற 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டு வருகிறது.