நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிப்பு; அமைச்சர் தகவல்
By: Nagaraj Wed, 25 Nov 2020 10:32:59 PM
நீர் நிலைகள் கண்காணிப்பு... ஈரோடு மாவட்டத்தில் நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயலையொட்டி கோபிச்செட்டிப்பாளைம் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கிரீப்பள்ளம் ஓடையை 11 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து
நீர்நிலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மழை,
வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், மாவட்டம் முழுவதும் 95 இடங்களில் 50 ஆயிரம்
பேர் வரை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படடு உள்ளளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் அதிகாரிகள்
உடனிருந்தனர்.