Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி இட மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை

கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி இட மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:10:21 AM

கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி இட மாற்றம்  செய்யப்பட்டதால் சர்ச்சை

மூன்று வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த பணியிட மாற்றம் வழக்கமானதுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், கொரோனா பணிகளை மேற்கொள்ள தன்னுடைய மூன்று வார கால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார்.

female officer,infant,mission,change,controversy ,
பெண் அதிகாரி, கைக்குழந்தை, பணி, மாற்றம், சர்ச்சை

இந்நிலையில், சவுமியா கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சரியான ஓய்வுக்கு பிறகு பணிக்கு வர வேண்டும் என்றும் அன்பான அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இவர் காஷிபாத்தில் இருந்து கான்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிமாற்றம் வழக்கமானது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Tags :
|
|