Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐஸ்கிரீமில் நெளிந்த புழுக்கள்... உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ஐஸ்கிரீமில் நெளிந்த புழுக்கள்... உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

By: Nagaraj Tue, 27 Dec 2022 10:41:23 AM

ஐஸ்கிரீமில் நெளிந்த புழுக்கள்... உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ஆற்காடு: ஐஸ்கிரீமில் புழு... ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடில் ஐஸ்கிரீமில் புழுக்கள் இருந்ததாகக்கூறி இளைஞர் ஒருவர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் பார்லரில் தாவூத் பாஷா என்பவர் தனது மகனுடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

hype,complaint,inspection,food safety,ice cream,worms ,பரபரப்பு, புகார், ஆய்வு, உணவு பாதுகாப்பு, ஐஸ்கிரீம், புழுக்கள்

அப்போது பாதாம் ஃப்ரூட்ஸ் ஐஸ்கிரீமில் புழுக்கள் நெளிந்தவாறு காணப்பட்டதாகக் கூறி, தாவூத் பாஷா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காலாவதியான பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம் விநியோகித்ததை கண்டுபிடித்ததுடன் அவற்றை ஆய்வுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|