Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Wed, 28 Oct 2020 09:27:23 AM

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 10 ஆயிரத்து 983 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினத்தின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

virudhunagar district,corona virus,infection,treatment,kills ,விருதுநகர் மாவட்டம்,கொரோன வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 16,221 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 937 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாவட்ட சுகாதார துறையினர் 9 பேர் கொண்ட பட்டியலை மட்டுமே வெளியிட்ட நிலையில் மாநில சுகாதார துறையினர் இந்த மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

Tags :