Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3.42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3.42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Thu, 08 Oct 2020 2:28:03 PM

உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3.42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.42 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் உச்சகட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

corona,single day,worldwide,number,vulnerability ,கொரோனா, ஒரே நாள், உலகம் முழுவதும், எண்ணிக்கை, பாதிப்பு

நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 879 பேர் உயிரிழந்துள்ளதால் இதுவரை தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கொரேனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியே 73 லட்சத்து 95 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 79 லட்சத்து 25 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களில் 67 ஆயிரத்து 380 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|