தேனியில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Monisha Fri, 18 Sept 2020 2:13:31 PM
தேனியில் ஏற்கனவே 14,043 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்த 5 லட்சத்து 25 ஆயிரத்து 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
ஆனாலும் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 14,043 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,100 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 12,484 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 154 பேர் உயிரிழந்துள்ளனர்.