Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Wed, 09 Sept 2020 11:11:47 AM

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,412 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 684 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.

theni district,corona virus,infection,death,treatment ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 13,338 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,412 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12,342 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 153 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|