தேனியில் இன்று மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Monisha Sat, 12 Sept 2020 10:23:52 AM
தேனியில் ஏற்கனவே 13,605 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று மேலும் 81 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் சிகிச்சைக்கு பின் 4 லட்சத்து 35 ஆயிரத்து 422 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 13,605 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,686 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12,661 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 156 பேர் உயிரிழந்துள்ளனர்.