Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Monisha Thu, 05 Nov 2020 09:09:30 AM

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,409 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34, 429ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

ariyalur district,corona virus,infection,treatment,deaths ,அரியலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,409 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,050 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 574 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags :