அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 01 Aug 2020 12:32:05 PM
கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70 ஆயிரத்து 862 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 11 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில் 65 ஆயிரத்து 537 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,05,847 ஆக உள்ளது.