Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் புதிதாக 12,134 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 302 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் புதிதாக 12,134 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 302 பேர் உயிரிழப்பு

By: Monisha Sat, 10 Oct 2020 11:18:51 AM

மகாராஷ்டிராவில் புதிதாக 12,134 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 302 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது. அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 12 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 6 ஆயிரத்து 018 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

maharashtra,corona virus,infection,death,treatment ,மகாராஷ்டிரா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 323 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 29 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|