Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,541 பேருக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,541 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 19 Sept 2020 09:31:12 AM

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,541 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 15-வது இடத்தில் உள்ளது.

corona virus,bangladesh,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பங்களாதேஷ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போதைய நிலவரப்படி வங்காளதேசத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.50 லட்சத்தை நெருங்குகிறது. வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,541 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3,45,805 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 22 பேர் பலியாகியதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கொரோனாவில் இருந்து 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக உள்ளன.

Tags :