Advertisement

ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 30 July 2020 10:14:42 AM

ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதன் தாக்கம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

iran,corona virus,corona prevalence,corona death ,ஈரான், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

தற்போது ஈரானில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,98,909 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஈரானில் ஒரே நாளில் 196 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் இதுவரை 2.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்த நாடுகளில் ஈரான் 11-வது இடத்தில் உள்ளது.


Tags :
|