Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 4:03:36 PM

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,868 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவுயுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 7.90 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பின்னும் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணடமடைந்துள்ளனர். தற்போது வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.87 லட்சத்தை கடந்துள்ளது.

corona death,corona virus,corona prevalence,bangladesh ,கொரோனா மரணம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, பங்களாதேஷ்

வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,868 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,87,959 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 41 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து 1.68 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :