Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,907 பேருக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,907 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 11 Aug 2020 10:15:33 AM

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,907 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

corona virus,bangladesh,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பங்களாதேஷ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

வங்காளதேசத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.60 லட்சத்தை நெருங்கியுள்ளது. வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2,907 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,60,507 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 39 பேர் உயிரிழந்ததால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 15-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :