Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 4496 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 4496 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதாரத்துறை அறிவிப்பு

By: Nagaraj Wed, 15 July 2020 10:21:10 PM

தமிழகத்தில் இன்று 4496 பேருக்கு கொரோனா பாதிப்பு; சுகாதாரத்துறை அறிவிப்பு

இன்று 4496 பேருக்கு கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 4,496 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,496 பேர்களில் 1,291 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,942 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

department of health,corona,examination,today,4496 people ,சுகாதாரத்துறை, கொரோனா, பரிசோதனை, இன்று, 4496 பேர்

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2000ஐ குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2167 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 5,000 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 102,310 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 39,715 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tags :
|
|