இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Tue, 04 Aug 2020 3:02:33 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரிசோதனை மாதிரி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 18,55,746 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 12.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்துக்கும் 86 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 38,938 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம், டெல்லி போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தற்போது கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.