Advertisement

கேரளாவில் இன்று புதிதாக 821 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 19 July 2020 8:19:28 PM

கேரளாவில் இன்று புதிதாக 821 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 821 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய அறிவிப்பை மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு புதிதாக 821 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

kerala,corona,increase,treatment,7063 persons ,கேரளா, கொரோனா, அதிகரிப்பு, சிகிச்சை, 7063 பேர்

இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 110 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 69 பேர்.

கேரளத்தில் தொற்று இருப்பவர்கள் உறுதி செய்யப்பட்டவர்களில் 43 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படவில்லை.

இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,063 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 42 ஆக உள்ளது.

Tags :
|
|