Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4 நாடுகளில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்

4 நாடுகளில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்

By: Karunakaran Mon, 17 Aug 2020 2:40:51 PM

4 நாடுகளில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் தகவல்

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டாலும் கூட பிற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் 4 நாடுகளில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

3 நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அவை இந்தியா (65 ஆயிரம்), பிரேசில் (60 ஆயிரம்), அமெரிக்கா (52 ஆயிரம்) ஆகும். கொலம்பியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

corona prevalence,4 countries,world health organization,corona virus ,கொரோனா பாதிப்பு, 4 நாடுகள், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ்

தினமும் ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையில் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. பெருவில் 9,441, அர்ஜெண்டினாவில் 7,498, மெக்சிகோவில் 7,231, சிலியில் 2,077, பொலிவியாவில் 1,388, டொமினிக் குடியரசில் 1,354, வெனிசூலாவில் 1,281, கவுதமாலாவில் 1,144, கோஸ்டா ரிக்காவில் 1,072, பனாமாவில் 1,069, ஈக்குவடாரில் 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக பதிவாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்கா, மொராக்கா, எத்தியோப்பியா ஆகியவற்றில் தலா ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கு இடையே கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. .ஐரோப்பாவில் ஸ்பெயினில் 5,479, ரஷியாவில் 5,061, பிரான்சில் 2,667, உக்ரைனில் 1,847, இங்கிலாந்தில் 1,440, ஜெர்மனி, ருமேனியாவில் தலா 1,415 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. .ஆசியாவில் பிலிப்பைன்சில் 6,134, ஈராக்கில் 4,013, ஈரானில் 2,501, வங்காளதேசத்தில் 2,766, இந்தோனேசியாவில் 2,307, கஜகஸ்தானில் 1,847, சவுதி அரேபியாவில் 1,383, ஜப்பானில் 1,360, துருக்கியில் 1,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :