Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 16 July 2020 5:54:25 PM

பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு உள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதேபோல் கொரோனா உயிரிழப்பும் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கு 857 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

brazil,corona virus,corona prevalence,corona death ,பிரேசில், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் 19 லட்சத்து 26 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. மேலும், நேற்று ஒரு நாளில் மட்டும் 1,300 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

பிரேசிலில் கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா, ரஷ்யா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|