Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 11 June 2020 5:52:53 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

india,coronavirus,tamil nadu,tiruvallur district,casualties ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,திருவள்ளூர் மாவட்டம்,உயிரிழந்தோர் எண்ணிக்கை

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,581 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,656 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 795 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|