தமிழகத்தில் தான் கொரோனா படுக்கைகள் அதிகளவில் தயார் நிலை
By: Nagaraj Sat, 19 Sept 2020 3:21:24 PM
அமைச்சர் தகவல்... உலகிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா படுக்கைகள் தயாராக இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை தலைவர் தேரனி ராஜன் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில்
கொரோனா சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 42,000 படுக்கைகள் தயாராக உள்ளது.
உயிரிழப்புகளை குறைக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரும், அதிகாரிகளும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதாகவும்,
பணியாளர்களை உற்சாகப்படுத்தவே முதல்வர் களத்திற்குச் செல்வதாகவும் அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்தார்.