கதக் ஜிம்ஸ் அரசு மருத்துவமனையின் லிப்டில் 2 நாட்களாக கிடந்த கொரோனா உடல்
By: Karunakaran Wed, 26 Aug 2020 12:36:22 PM
கதக் மாவட்டத்தில் உள்ள டவுனில் ஜிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என குற்றச்சாட்டுகள் பல எழுந்து வருகின்றன.
மேலும்,கொரோனா தாக்கி பலியானவர்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்யாமல் ஆங்காங்கே போட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனையின் லிப்டில் கொரோனாவுக்கு பலியான ஒருவரின் உடல் 2 நாட்களாக கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் மாடி படிக்கட்டுகளில் முழு கவச உடைகளை கழற்றி ஊழியர்கள் போட்டு வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வை அங்கிருந்த ஒரு நோயாளி செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது பெரும் வைரலாகியது. பின்னர் இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த விவகாரம் பெரிய அளவிற்கு சென்றது.
இதனால் உடனே லிப்டில் இருந்து, கொரானாவுக்கு பலியானவரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.