Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு வாரங்களாக இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இரண்டு வாரங்களாக இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 19 Mar 2023 5:48:23 PM

இரண்டு வாரங்களாக இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: 2 வாரங்களாக அதிகரிக்கும் கொரோனா... இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்புகள் 700 ஐத் தாண்டியது.

இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாகும். கடந்த 16ஆம் தேதி 754 ஆகவும், 17ஆம் தேதி 796 ஆகவும் இருந்த பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று 843 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,071 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona,impact,increase,india, ,அதிகரிப்பு, இந்தியா, கொரோனா, பாதிப்பு

கடந்த நவம்பர் 10ஆம் தேதி நிலவரப்படி,பாதிப்புகளின் எண்ணிக்கை 1,016 ஆக இருந்தது. அதன்பிறகு, 128 நாட்களுக்குப் பிறகு, தினசரி பாதிப்பு இப்போது மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 249 பேரும், குஜராத்தில் 179 பேரும், கேரளாவில் 163 பேரும், கர்நாடகாவில் 121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 95 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 542 பேர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,915 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைய விட 526 அதிகம். மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் நேற்று தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,802 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|
|
|