Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு

By: vaithegi Wed, 28 Dec 2022 1:12:07 PM

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு

இந்தியா: புதியதாக 188 பேருக்கு கொரோனா .... சீனாவில் கொரோனா வைரசின் பிஎப் 7 ஒமைக்ரான் திரிபு வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பணிகள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

எனவே இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 77 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் 47 உயர்ந்து 3 ஆயிரத்து 468 ஆக உள்ளது.

மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளை, வைரஸ் பாதிப்பால் இதுவரை மட்டும் 5 லட்சத்து 30 ஆயிரத்து 696 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220 கோடியே 7 லட்சத்து 34 ஆயிரத்து 218 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Tags :
|