நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தது: மத்திய சுகாதாரத்துறை தகவல்
By: Nagaraj Sun, 09 Apr 2023 10:55:28 PM
புதுடில்லி: கொரோனா பாதிப்பு குறைந்தது... நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 6 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி இருந்த நிலையில், 5 ஆயிரத்து 357ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக நோய் தொற்று பாதித்தோரையும் சேர்த்து, நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுப்போரின் எண்ணிக்கை 32,814ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு புதிதாக 11 பேர் பலியாகியிருப்பதாகவும், இதில் 3 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சற்றே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags :
impact |
least |
gujarat |
corona |