Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 27 June 2020 10:06:33 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும்14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிப்படைந்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 20-ம் தேதி 14,516 பேருக்கும், 21-ம் தேதி 15,413 பேருக்கும், 22-ம் தேதி 14,821 பேருக்கும், 23-ம் தேதி 14,933 பேருக்கும், 24-ம் தேதி 15,968 பேருக்கும் 25-ம் தேதி 16,922 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.

coronavirus,india,corona death,corona infection ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா மரணம், கொரோனா தொற்று


நேற்றைய இரவு நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலே கொரோனா அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், ரஷ்யா நாடுகள் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|