கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Fri, 10 July 2020 09:55:18 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஆனால் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 965 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,068 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.