திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Tue, 16 June 2020 1:22:13 PM
திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 16 நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 46,504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 25,344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. 17,476 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 382-ஆக உள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.