Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 17 July 2020 5:05:04 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 8,908 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.

chengalpattu district,corona virus,infection,treatment,kills ,செங்கல்பட்டு மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 8,908 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,561 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags :