Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 22 June 2020 1:06:19 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

tamil nadu,coronavirus,infection,chengalpattu district ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,செங்கல்பட்டு மாவட்டம்

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,861 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 1,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags :