Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 22 June 2020 1:37:23 PM

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 218 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

thiruvarur district,coronavirus,influenza,government hospital ,திருவாரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,அரசு மருத்துவமனை

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 218 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 230ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Tags :