Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 03 Sept 2020 12:54:46 PM

நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 9,796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது.

nellai district,corona virus,infection,death,treatment ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 9,796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,945 ஆக அதிகரித்துள்ளது. ஏழாயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனவுக்கு 170 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனனர்.

Tags :
|