Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 15, 436 பேருக்கு கொரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 15, 436 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 05 Oct 2020 10:32:10 AM

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 15, 436 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

virudhunagar district,corona virus,infection,treatment,deaths ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 480 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா உறுதியானது. 3 ஆயிரத்து 560 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 103 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 11 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,494 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

Tags :