Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Tue, 16 June 2020 11:08:13 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 16 நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

tamil nadu,thiruvannamalai district,coronavirus,chennai ,தமிழ்நாடு,திருவண்ணாமலை மாவட்டம்,கொரோன வைரஸ்,சென்னை

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :