Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 08 July 2020 1:01:29 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus,vulnerability,death,treatment,discharge ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 165 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 448-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :
|