Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 17 June 2020 1:58:00 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,945 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 528 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

tiruvallur district,coronavirus,infection,impact,tamilnadu ,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,தொற்று,பாதிப்பு,தமிழ்நாடு

சென்னையில் மொத்தம் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,945 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|