Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Tue, 23 June 2020 2:48:32 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,872 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,chengalpattu,infection,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,செங்கல்பட்டு,பாதிப்பு,சிகிச்சை

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,752 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 3,872 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 144 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,016 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :